சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கஞ்சா போதை கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பு!

Published by
Venu

கஞ்சா போதை கும்பலின் அட்டகாசம்  சென்னை வியாசர்பாடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள எஸ்.ஏ. காலனிக்கு நள்ளிரவில் கஞ்சா போதையில் ஒரு கும்பல் வந்துள்ளது. முகத்தை துணியால் மறைத்திருந்த அந்தக் கும்பல் திடீரென காலனியின் எட்டு மற்றும் பத்தாவது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கற்களை வீசியும், கட்டைகளால் தாக்கியும் அடித்து சூறையாடியது. ஆட்டோ ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் முரளியையும் அந்தக் கும்பல் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

கஞ்சா போதைக் கும்பலின் அட்டகாசத்தில் அப்பகுதி வாசிகள், பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று மணிகண்டன் என்ற இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சா கும்பலால் வீதியில் நடமாட முடியாத சூழலும் இருப்பதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எம்.கே.பி. நகர் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்ளாததும், கஞ்சா கும்பல் தொடர்பாக புகார் அளித்தால் கண்டுகொள்ளாமல் இருத்தலுமே அட்டகாசம் அதிகரிக்கக் காரணம் என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே கஞ்சா போதையில் நிகழும் அட்டகாசத்தை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago