சென்னையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயர் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் மாரடைப்பு காரணமாக காலமானார். ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயரான அவருக்கு 83 வயதாகிறது. மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிற்பகல் 12.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.