சென்னையில் சோகம்!காதல் தம்பதி குழந்தையின்மையால் தூக்கிட்டுத் தற்கொலை!

Published by
Venu

சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை சுகன்யா தவிர்த்து வந்துள்ளார். நேற்று மாலை, தனது வேதனையை வெளிப்படுத்திய சுகன்யாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்ற , சந்திரன் வீடு திரும்பிய போது சுகன்யா தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

தனது காதல் மனைவி இல்லாத உலகில் தானும் வாழவிரும்பவில்லை என்று கடிதம் எழுதிய சந்திரன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றின் மறுமுனையில் தானும் தூக்குப் போட்டுக் கொண்டார். வீட்டுக் கதவு வெகுநேரம் பூட்டியிருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் பார்த்தபோது இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்காக அதிநவீன மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் குழந்தையின்மையை ஒரு குறையாக கருதி, வாழ வேண்டிய தம்பதி உயிரை மாய்த்துக் கொண்டதுதான் சோகம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

6 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

6 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

6 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

6 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

6 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

7 hours ago