வயதான பெண்களை குறி வைத்து சென்னையில் 68 வயது நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை வளசரவாக்கம் வேலன் நகரில் வசிக்கும் லஷ்மி என்ற 70 வயதான பெண் அணிந்திருந்த 4 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். ஆழ்வார் திருநகரில் கடைக்கு செல்வதற்கான நேற்று சாலையோரம் நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 68 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கரவாகனத்தில் பின்தொடர்ந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் கேகே நகரில் ஒரு பெண்ணிடம் அந்த வயதான நபர் செயின்பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள்தான் செயின் பறிப்பில் ஈடுபடுவது வழக்கம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், வயதான நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தங்களுக்கு விசித்திரமாக இருப்பதாக கூறியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அந்த நபரை வளசரவாக்கம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…