சென்னையில் செயின் பறிப்பில் வயதான பெண்களை நோட்டமிட்டு ஈடுபடும் 68 வயது நபர்!

Default Image

வயதான பெண்களை குறி வைத்து சென்னையில்  68 வயது நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை வளசரவாக்கம் வேலன் நகரில் வசிக்கும் லஷ்மி என்ற 70 வயதான பெண் அணிந்திருந்த 4 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். ஆழ்வார் திருநகரில் கடைக்கு செல்வதற்கான நேற்று சாலையோரம் நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 68 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கரவாகனத்தில் பின்தொடர்ந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் கேகே நகரில் ஒரு பெண்ணிடம் அந்த வயதான நபர் செயின்பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள்தான் செயின் பறிப்பில் ஈடுபடுவது வழக்கம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், வயதான நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தங்களுக்கு விசித்திரமாக இருப்பதாக கூறியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அந்த நபரை வளசரவாக்கம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்