சென்னையில் கோடை விடுமுறைக்குப் பின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு!

Default Image

இன்று கோடை விடுமுறைக்குப் பின் சென்னையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இதனை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை கூறியுள்ளனர். அதன்படி பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள போலீசார், கலாட்டா மற்றும் அடிதடிகளில் ஈடுபட்டால் வழக்குகளில் சிக்கி எதிர்காலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில கல்லூரிகளின் முதல்வர்களையும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்