சென்னையில் கேரளா மாணவி எரித்து கொலையா?

Published by
Venu

எரித்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை சென்னை அடுத்த செங்கல்பட்டில் கண்டெடுத்துள்ளனர். கேரளாவில் 50 நாட்களுக்கு முன்பு மாயமான கல்லூரி மாணவியின் அடையாளங்களுடன் ஒத்து போவதால் கேரளா போலீசார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி எனும் பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டனர். உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது சுமார் 20 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலமாக இருக்கலாம் எனவும், எரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பெண் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? கொலையாளிகள் யார்.. ? கொலைக்கான காரணம் என்ன..? என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றாலும் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மாயமான கல்லூரி மாணவியின் அடையாளங்களோடு ஒத்து போவதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜேஸ்னா மரியா ஜேம்ஸ். கேரளாவில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் மார்ச் 22-ம் தேதி மாயமானார். இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 50 நாட்களாக மாயமான ஜேஸ்னாவை தேடி வருகின்றனர்.

 

 

இந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் காணாமல்போன கல்லூரி மாணவி ஜேஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவிப்பு செய்து இருந்தது. இவரது புகைப்படங்கள் ஏற்கனவே தமிழக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த புகைபடத்தில் பற்களில் க்ளிப் மாட்டியிருப்பது போன்று எரிந்த சடலத்தின் பற்களிலும் க்ளிப் உள்ளது.

மேலும் ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை மேலும் குறிப்பிட்ட சில அடையாளங்கள் ஒன்றுபோலக் காணப்படுவதால் சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும் கேரள மாநில காவல் துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பத்தினம்திட்ட போலீசார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago