சென்னையில் குப்பையில் பற்றி எரிந்த நெருப்பு!

Default Image

கூவம் ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்  தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு பின்புறம், கூவம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. அதில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிக அளவில் பரவி எரிந்த நெருப்பால், அப்பகுதி பெரும் புகைமண்டலமாக காணப்பட்டது. ஏதோ பெரிய தீ விபத்து நேரிட்டதுபோல காட்சியளித்தது.

 

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள், அவற்றை உரிய குப்பை கிடங்குகளுக்கு கொண்டுசெல்லாமல் கூவம் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர். ஆற்றின் கரையோரம் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுனெ கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்