சென்னையில் கடல் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற படகு போட்டி!

Published by
Venu

கடல் மாசு குறித்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படகுப் போட்டி நடைபெற்றது.

ஆண்டுதோறும் கடலில் சேரும் மாசுக்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் படகுப் போட்டி நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் மாவட்ட முற்போக்கு மீனவர் சங்கம் மற்றும் கடல் விழிப்புணர்வு குழு சார்பில் நடைபெற்ற இந்த படகு போட்டியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஏராளமான மீனவர்கள் ஆர்வமுடன் இந்த படகுப் போட்டியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும், சக மீனவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடலில் 10 கிலோ மீட்டர் தொலைவு சென்றுவிட்டு மீண்டும் கரைக்கு முதலில் திரும்பி வந்த படகுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் படகுப் போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

இந்த படகு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த, திருவான்மியூர், நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட அணிகளுக்கு நடிகர் பார்த்திபன் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும், அதற்கான கால அவகாசத்தை தற்போது எடுத்துக்கொண்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கடலில் மீன்கள் தவிர்த்து 20 சதவீதம் பிளாஸ்டிக்குகள் வலைகளில் சிக்குவதாக மீனவர்கள் கூறியது வருத்தமளிப்பதாகவும் பார்த்திபன் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago