சென்னையில் உயிரை கொடுத்து பேத்தியின் உயிரை காப்பாற்றிய பெண்!

Published by
Venu

பால்கனி இடிந்து விழுந்ததில் சென்னை முகப்பேரில்  பலியான பெண், உயிர் போகும் தருணத்திலும் தனது மடியில் இருந்த 8 மாத குழந்தையான தனது பேத்தியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் நடராஜன் – லெட்சுமி தம்பதியினர் 14 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு தமிழ்செல்வி, சுகன்யா என இரு மகள்களும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எட்டுமாத பெண் குழந்தையான தனது பேத்தி லட்சணாவை மடியில் வைத்தபடி லட்சுமி பால்கனியில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தார். அவரது கணவர் நடராஜனும் அருகே அமர்ந்து மகள்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென மேலே உள்ள இரண்டாவது தளத்தின் பால்கனி இடிந்து இவர்கள் மீது விழுந்தது. அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேத்தியை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்த லட்சுமி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருப்பது தெரிந்தது.

ஆனால், மடியில் இருந்த பேத்தியின் மீது இடிபாடுகள் விழாமல் குனிந்து தடுத்தபடியே லட்சுமி தனது உயிரை விட்டிருப்பதை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். அருகில் அமர்ந்திருந்த லெட்சுமியின் கணவர் நடராஜன் பலத்த காயமடைந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். லெட்சுமியின் இரண்டு மகள்களும் சிறு காயத்துடன் தப்பினர்.

இதனிடையே, பால்கனி இடிந்து விழுந்த போது இடிபாடுகள் தெருவிலும் விழுந்தன. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மகேஸ்வரன் மீது விழ, ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

உயிரிழந்த லட்சுமி குடியிருந்த வீடு கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பழுதடைந்த பகுதிகளை சீரமைத்துத் தரும்படி  பலமுறை கேட்டும், உரிமையாளர் குமார் அதைப் பொருட்படுத்தவில்லை என வாடகைக்குக் குடியிருப்போர்  கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து நொளம்பூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமி தனது உயிரை விட்டு, தனது பேத்தியின் உயிரை காப்பாற்றிய இந்த சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago