பைக் ரேசில் ஈடுபட்ட 6 இளைஞர்களை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு திரு.வி.க. பாலத்தில், புதனன்று இரவு இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிவேகத்தில் சீறிய அந்த இருசக்கர வாகனங்களால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்த அடையாறு போலீசார், பந்தயத்தில் ஈடுபட்டவர்களை விரட்டிச் சென்றனர். எனினும் தப்பிச் சென்ற அந்த இளைஞர்கள், ஒரு பைக்கை தவறி விட்டுச் சென்றனர். அதன் பதிவெண்ணைக் கொண்டு, உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அதில், பெரம்பூர் சாலமன், சூபியான், புளியந்தோப்பு கலீல், முஜிப், கரீம் உள்ளிட்ட 6 பேர் பைக் ரேசில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. அதன்பேரில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 பேரையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…