சென்னையில் இரவு நேரங்களில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

Default Image

பைக் ரேசில் ஈடுபட்ட 6 இளைஞர்களை  சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு திரு.வி.க. பாலத்தில், புதனன்று இரவு இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிவேகத்தில் சீறிய அந்த இருசக்கர வாகனங்களால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

தகவலறிந்த அடையாறு போலீசார், பந்தயத்தில் ஈடுபட்டவர்களை விரட்டிச் சென்றனர். எனினும் தப்பிச் சென்ற அந்த இளைஞர்கள், ஒரு பைக்கை தவறி விட்டுச் சென்றனர். அதன் பதிவெண்ணைக் கொண்டு, உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அதில், பெரம்பூர் சாலமன், சூபியான், புளியந்தோப்பு கலீல், முஜிப், கரீம் உள்ளிட்ட 6 பேர் பைக் ரேசில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. அதன்பேரில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்