சென்னை:கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலைக்கு அனுமதி வழங்க..!சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை..!!

Published by
kavitha
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு அனுமதி வழங்குவதற்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதிகரித்து வரும் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பெரூர் என்ற இடத்தில் நாளொன்றிற்கு 40 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைக்க சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டிருந்தது. இதற்காக கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் சென்னை குடிநீர் வாரியம் விண்ணப்பித்திருந்தது.


இந்நிலையில், இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நிபுணர் மதிப்பீட்டுக் குழு 6 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆலையால் கடலோரத்தில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் இழப்பீடுகளுக்கான முழுப் பொறுப்பை சென்னை குடிநீர் வாரியமே ஏற்றுக்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்றும் சுனாமி பேரலைகள் பாதிக்காதபடி ஆலை அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதுமட்டுமல்லாது ஆலை கட்டுமானத்தின் போது கடலில் பதிக்கப்படும் குழாய்களை கட்டுமானம் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றிவிட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

54 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago