சூறை காற்றுடன் பெய்து வரும் தொடர் மழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் அறுந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகினர். பாறையில் சறுக்கி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐந்துளி பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த போது, மின்கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் எஸ். டி. மங்காடு பகுதியைச் சேர்ந்த பாலையன் என்ற முதியவரும் சூறைகாற்றால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் பலியானார். திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஷாஜின் என்ற இளைஞர் அவரது வீட்டின் அருகே உள்ள சிதறால் மலை கோயிலுக்கு நண்பர்களுடன் சென்றபோது, பாறையில் இருந்து சறுக்கி கீழே விழுந்து உயிர் இழந்தார் கனமழை மற்றும் சூறைக்காற்றால் 28 வீடுகள் சேதமடைந்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மது ஒழிப்பு மாநாடு'…
அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று…
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு…
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…