சூப்பர் ஸ்டார் எங்கே ? ” வாய் திறக்காத ரஜினி..!!
சென்னை:
தமிழகத்தில் மாணவி சோபியா விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ள நிலையில், விரைவில் கட்சி துவங்குவதாக அறிவித்த வருங்கால அரசியல்வாதி, நடிகர் ரஜினிகாந்த் அதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
மாணவி சோபியா கைதுக்கு கட்சி பேதம் மறந்து ஸ்டாலின் முதல் டிடிவி தினகரன் வரை கண்டனம் தெரிவித்து விட்டனர். ஏன் நடிகர் கமல்ஹாசனும் கூட கண்டனம் தெரிவித்து விட்டார்.
தற்போது மாணவி நீதிமன்றம் கூட சோபியாவை நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவித்து விட்டது.இப்போது கூட சோபியா விவகாரத்தில் கருத்து கூறாமல் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த் என்பது எல்லாருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
விமான நிலையத்தில் வைத்து தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குற்றம் என்பதற்காக ரஜினிகாந்த் அமைதிகாக்கிறாரா, அல்லது, சோபியாவையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராளிகளை குறிப்பிட்டதை போல சமூக விரோதி என கூற காத்திருக்கிறாரா என்று கேட்கிறார்கள் ரசிகர்களே நினைக்க ஆரம்பித்து விட்டனர்.இதுபோன்ற கூச்சலை ரஜினிகாந்த்தே முன்பு எழுப்பியுள்ளார்.
சென்னை ஏர்போர்ட் நியாபகம் வருகிறதா கடந்த மே மாதம் 30ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இரு கேள்விகள் கேட்டதற்கே ‘யே’ என்று சத்தம் போட்டார் ரஜினிகாந்த். வேற கேள்வி இருக்கிறதா என முகத்தை கோபத்தோடு வைத்துக் கொண்டு கேட்டார். எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று அவர் கூறியதும் ஏர்போர்ட் தான்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கேள்விக்குதான் இப்படி கோபத்தை வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த். அதுவும் ஏர்போர்ட்தான். தற்போது சோபியா சம்பவம் நடந்ததும் ஏர்போர்ட்தான்.
ரஜினி மட்டும் தற்போது அமைதியாக இருப்பது அரசியலில் இருக்கும் முக்கிய புள்ளிகளில் ரஜினிகாந்த் மட்டும் இன்னும் இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் இருப்பதன் நோக்கம் என்ன கோஷமிட்டதால் சோபியாவையும் சமூக விரோதி என ரஜினிகாந்த் நினைக்கிறாரா? என்று அவரின் ரசிகர்களே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
DINASUVADU