சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் இறந்ததில் மர்மம்; புளூகிராசில் புகார்…!!

Default Image

கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கொம்பன் காளை பங்கேற்று இறந்துவிட்டது. அக்காளை வாடிவாசல் அருகே இருந்த தென்னைமர கட்டையில் மோதி சுருண்டு விழுந்து இறந்தது. தலையில் கட்டை இடித்ததால் தான் இறந்ததாக கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கொம்பன் மர்மமாக இறந்ததில் எழுந்த சந்தேகத்தின் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று புளூகிராசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் கொம்பன் காளை எப்படி இறந்தது என சோதனையிட அமைச்சரின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட காளையை தோண்டி எடுத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்