சீல் வைக்கப்பட்ட மர்ம அறைகள் திறப்பு-போயஸ் கார்டன் இல்லத்தில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்…!!

Default Image

 

போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமான பணிகள் இன்று காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன.இப்பணியில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திறக்கப்பட்ட அந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது என்று வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளது.இதனால் அங்கு பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்