உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.
உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காளைகளும் காளையர்களும் சரி நிகராக விளையாடி வருந்த நிலையில் 35 பேர் காயமடையந்தனர்.இருவர் மாடு முட்டியதால் உயிரிழந்துள்ளனர்.
மாலை 4 மணிக்கு முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு 5 மணிவரை நீட்டிக்கப்பட்டது அவ்வாறு நீட்டிக்கட்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் பதிவு செய்யப்பட்டவர்களில் 660 காளைகள் மற்றும் 695 மாடுபிடி வீரர்கள் மட்டுமே தற்போது வரை வாய்ப்பு அளிக்கப்பட்டு பங்கேற்று விளையாடி உள்ளனர். இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் சிறப்பு பரிசு வழங்கப்பட்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது அடுத்ததாக 14 காளைகளை தழுவிய கார்த்திக் 2வது பரிசையும், 13 காளைகளை தழுவிய கணேசன் 3வது பரிசை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…