அரசுப் பேருந்து ஊழியர்களை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசார் தாக்கியதைக் கண்டித்து, திருப்பத்தூரில் சக ஊழியர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
நேற்றிரவு திருப்பத்தூரிலிருந்து மானாமதுரை சென்ற பேருந்தில் சென்ற பெண் காவலர், நீண்ட வாக்குவாதத்துக்கு பின் டிக்கெட் எடுத்துள்ளார். பின்னர் பணிமனையில் தூங்கிக் கொண்டிருந்த முருகானந்தம், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை, மானாமதுரை போலீசார் அழைத்துச் சென்று தாக்கியதாக புகார் எழுந்தது.
போக்குவரத்து அதிகாரிகளால் மீட்கப்பட்ட இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதையறிந்த திருப்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள், பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக, சிவகங்கை டிஎஸ்பி இளங்கோ உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…