சிலை கடத்தல் வழக்கு:டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணுசீனிவாசன் கைது வழக்கு …!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published by
Venu

சென்னை உயர்நீதிமன்றம்  ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை காணாமல் போன வழக்கில் டிவிஎஸ் குழும தலைவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Image result for tvs venu srinivasan HIGH COURT
இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த மனுவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என இன்று விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நேற்று  டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் இருந்துள்ளேன். ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது என்று  வேணு சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரிய நிலையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்தது.6 வாரத்திற்கு டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்யக்கூடாது என்று  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
முன்னதாக டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சென்னை கபாலீஸ்வரர் கோவில் அறங்காவல்குழு தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago