சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி திருத்தணி முருகன் கோயில் தங்க கவச முறைகேடு குறித்து விசாரணை!

Default Image

திருத்தணி முருகன்கோயில் இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் மேலாளர் பழனி ஆகியோரிடம் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினார்.

ஒரு மணிநேரம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயில் மூலவர் விமானத்துக்கான தங்ககவசம் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், பழநி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் சிலை செய்வதற்கு, திருத்தணி கோயில் நிர்வாகம் சார்பில் 10 கிலோ தங்கம் தரப்பட்டது பற்றியும் பொன் மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்