சிறுத்தை தாக்கி 11 வயது சிறுமி காயம்..!!

Default Image

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 11 வயது சிறுமி காயமடைந்தார்.

பெரியகல்லார் பகுதியை சேர்ந்த சிறுமி சத்தியா, தமது வீட்டின் பின்புறம் விறகுகளை காயவைத்துள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை, சத்தியாவை தாக்கியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுமியின் தாயார், விறுகு கட்டைகளை வீசி எறிந்து சிறுத்தையை விரட்டினார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அச்சத்துடன் வசிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்