சிறந்த சட்டம் ஒழுங்கு, சுற்றுலா வளர்ச்சி…தமிழகத்திற்கு 3 விருது…முதல்வர் பெருமிதம்..!!

Published by
Dinasuvadu desk

டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலுக்கு நிவாரண உதவி கோரினார். இதையடுத்து டெல்லியில் இந்தியா டுடே சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நாடு முழுவதும் அனைத்து மாநில பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக அரசுக்கு சிறந்த சட்டம் ஒழுங்கு, சிறந்த சுற்றுலா வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. விருதுகளை துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடுவிடம் இருந்து முதலமைச்சர் பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் வலிமையான மற்றும் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் வலிமையான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 8.4 சதவிகிதம். இந்திய அளவில் வறுமையை ஒழிப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. சரியான கொள்கை முடிவுகளும், தொலைநோக்கு பார்வையுமே இதற்கு முக்கிய காரணங்கள்.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago