சாத்தூர் அமமுக அலுவலகத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனையில், பல கோடிகள் சிக்கியுள்ளது.

இதனையடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் தொகுதியில் எதிர்கோட்டை எனும் இடத்தில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அமமுக அலுவலகத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்