#சாதிஎன்பதுவிதி??? இயக்குனர் பா.ரஞ்சித் .காட்டம்.!

Default Image

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசு பள்ளியில் திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த பெண் அங்கு சமையல் செய்துவந்தார்.அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள்கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார்.

இதை பொறுத்துக்கொள்ளாத அங்கு உள்ள வேறு ஜாதி மக்கள் அந்த பெண் சமைக்க கூடாது என்று  பிரச்சனை செய்தனர். இதை அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, அந்த பெண்ணை பணியிடம் மாற்ற உத்தரவு பிறப்பித்ததார்.இதையடுத்து பாப்பாளை இடமாற்றம் செய்ததை கண்டித்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அருந்ததியர் சமூகத்தினர் சேவூர் அவிநாசி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் அரசு பள்ளியில் சமையல் செய்ய பெண் ஒருவருக்கு உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு.

இந்த செய்தியால் இயக்குனர் பா.ரஞ்சித் கடும் கோபத்தில் கூறியதாவது….ஜாதி நமது விதி என்று கூறினார்.

மேலும் #சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம்..திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கனும்.. என்ன பன்னலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பன்ன போறோம்????

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்