சாகும் முன்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியவர்..!! மனைவியின் தொல்லையே காரணம்..

Published by
Dinasuvadu desk

ஈரோடு ,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கிராமம் தான் புதுப்பாளையம். இங்கு 37 வயதுள்ள அன்பரசன் என்ற கட்டிடத்தொழிலாளி வசித்து வந்தார்.ஆனால்  நேற்று ஊர் முழுவதும்  அன்பரசனின் பெரிய போட்டோ போட்டு  இறந்து விட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், அன்பரசனின் பெரிய போட்டோ இடம் பெற்றிருந்தது.

இந்த போஸ்டர் நேற்று ஊர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.அன்பரசனின் சொந்தங்கள் அந்த போஸ்ட்டரை  பார்த்து அதிர்ந்து போனார்கள்

” என்னாச்சு.. என்னாச்சு:..

என்று அதிர்ச்சி அடைந்த சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க அன்பரசன் வீட்டுக்கு மாலையுடன் வந்துவிட்டனர். வந்தவர்களுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சியோ ,அதிர்ச்சியோ அதிர்ச்சி! வீட்டில்  அன்பரசன் சாகாமல் உயிரோடு கட்டிலில் சோர்வாக உட்கார்ந்து கொண்டிருந்தார். சொந்தங்களும் , நபண்பர்களும் அன்பரசனிடம் அதிர்ந்து உக்கார்ந்து பேசினார்.அப்போது அவர் கூறிய சம்பவம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது

 

தூக்கம் விசாரிக்க வந்த நபர்கள் மற்றும் சொந்தக்காரர்களிடம் அன்பரசன்  “நான் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வழக்கமான சண்டையை போட ஆரம்பித்துவிட்டாள்.விடாமல் என்னை தீட்டி தீர்த்த என் மனைவி  ரொம்ப நேரம் ஆகியும் நிறுத்தவே இல்லை. இதனால் மனசு நொந்து போய் எனக்கு நானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினேன். போஸ்டர்கள் என்னுடைய கையில் கிடைச்சதும், அதனை நானே ஊர் முழுவதும்  ஒட்டினேன். இப்போது, சாகலாம் என்று எலி மருந்தையும் தின்றுவிட்டேன்.என்றார்.

இதைக் கேட்டதும்  அதிர்ந்து போன உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். அதில் அன்பரசனை  ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்…

 

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி விட்டு சாக மருந்து குடித்தவரை மீட்ட சம்பவம் அங்கே மிகவும் பரபரப்பை உண்டாக்கியது..

 

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

16 hours ago