சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், மார்ச் மாதம் நினைவிடம் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செலவில் கட்டப்பட்டு வரும் நினைவிடத்திற்கு தடைகோரி ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் இருப்பதாகவும் வரும் மார்ச் மாதம் நினைவிடம் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் வைத்ததை எதிர்த்த மனு தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதனையேற்ற நீதிபதிகள்,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…