சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் – தமிழக அரசு விளக்கம்…!!

Default Image

சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், மார்ச் மாதம் நினைவிடம் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செலவில் கட்டப்பட்டு வரும் நினைவிடத்திற்கு தடைகோரி ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் இருப்பதாகவும் வரும் மார்ச் மாதம் நினைவிடம் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் வைத்ததை எதிர்த்த மனு தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதனையேற்ற நீதிபதிகள்,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்