விசுவ இந்து பரிஷத் என்கிற அமைப்பின் சார்பில் விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, உத்திர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டும் வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகிற ரத யாத்திரையானது இன்று நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதிக்கு வந்து சேர்ந்தது.
மக்களை பிளவுபடுத்துகிற ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகளின் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே சமயம், இந்த ரத யாத்திரை எவ்வித சலனமும் இன்றி தொடர்ந்து செல்லும் விதத்தில் நெல்லையில் 144 தடை உத்தரவினை விதித்து, தான் பாஜகவின் ஊதுகுழல் அரசுதான் என்பதனை மீளவும் ஓர் முறை மெய்ப்பித்துள்ளது எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் அரசு.
இந்நிலையில், சட்டப்பேரவையில், தமிழகத்தில் ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின். அப்போது, ரத யாத்திரையை ஆதரிக்கும் விதமாக முதல்வர் பேசியதால் கடும் கோபமடைந்த நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சட்டப்பேரவையின் மைய மண்டபத்திற்கு முன் தனியாளாய் விரைந்து சபாநாயகரை நோக்கி ஆவேசமாக முழக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்டு சட்டப்பேரவையை கலங்கடித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…