கோவை மாவட்டத்தில் அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டது. இதற்கிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் லஞ்சம் பெருவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து,அரசு உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தடை விதித்தது.
இந்நிலையில், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பலாம் என்று அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை உதவி பேராசிரியரும், பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. பேராசிரியர்கள் சங்க தலைவருமான சரவணகுமார், நேற்று மாலை பதிவாளர் அறைக்கு சென்றார்.
பின்னர் அரசு, உதவி பேராசிரியர் பணியிடத்தில் ஊழல் நடக்கக்கூடாது என்றும், பணியிடங்களை நேர்மையாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதுபோன்று பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை பணிமாறுதல் வழங்கப்படுகிறது.
அதில் சிலரை விரும்பாத இடங்களுக்கு மாற்றப்படுவதால், அவர்களின் விருப்பத்தை கேட்டறிந்து மாறுதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிவாளர் அளித்த பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் அவர் மற்ற உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து பதிவாளர் அறை முன்பு அமர்ந்து தனது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் இங்கு வந்து எங்களது கோரிக்கையை ஏற்றால்தான், போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள்.
தற்போது துணைவேந்தர் இங்கு இல்லை, அவர் வெளியூரில் இருக்கிறார் என்று அவர்கள் கூறினாலும், துணைவேந்தர் வரும்வரை நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி இரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…