கோவை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீர் உயிரிழப்பு..!

Default Image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னக்காளை(வயது 47).

இவர் கடந்த 2006-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் நாமகிரிபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சின்னக்காளைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நேற்று இரவு ஜெயில் அறையில் சின்னக்காளைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித் துடித்தார்.

சத்தம் கேட்டு அங்கு சென்ற ஜெயில் ஊழியர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து ஜெயில்சூப்பிரண்டு செந்தில்குமார் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்