கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தடை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு இருப்பவர்களின் படங்களை போட்டு பேனர் வைப்பதற்கு தடை விதித்தது.
who killed raghu:
இதனை தொடர்ந்து முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்களோடு இணைந்து இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட பேனர்களை வைக்க ஆரம்பித்தனர். இப்படி மக்கள் அணிதினமும் பயன்படுத்தும் சாலை மற்றும் நடைப்பாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர் மற்றும் தோரண வாயில் இடையுறால் கோவையை சேர்ந்த வாலிபர் ரகு என்பவர் சாலை விபத்தில் கடந்த 24.11.17 அன்று உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்டு மிகவும் கோவமடைந்தனர்,பின்பு அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்களை மாறி மாறி குற்றம் சாட்டிகொண்டிருந்தனர்.இதனால் மக்கள் “who killed raghu?”(ரகுவை கொன்றது யார்?) என்று அந்த அலங்கார தோரண வாயில் வைக்கபட்டிருந்த இடத்திலும் எழுதி இருந்தனர் அடுத்த கணமே அதனையும் அழித்தது கோவை மாநகராட்சி.
இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது கோவையில் நடைபெற உள்ளதால் அங்கு வைக்கபட்டுள்ள பேனர்களுக்கும்,அலங்கார தோரண வாயில்களுக்கும் ஷிப்ட் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. டாஸ்மார்க் எதிரான போராட்டங்களை ஓடுக்க பெண் மற்றும் ஆண் காவலர்களை பணிக்கு அமர்த்தியதைத் தொடர்ந்து தற்போது பேனர்களை காப்பாற்ற போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறது நமது அரசு .
என்றும் மக்கள் பணியில் அதிமுக அரசு…..
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…