கோவை அருகே சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு!

Default Image

 கழிவுநீர்க் கால்வாயில் கோவை சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சாக்கு  மூட்டையில்  கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த 18ந் தேதி வீட்டில் இருந்து மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில்,  சிங்காநல்லூர் குளத்தேரி அருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டவாறு சாக்கு மூட்டையில் இருந்த சடலத்தை கைப்பற்றினர்.

விசாரணையில், ஏற்கனவே காணாமல் போன ஜெயந்தியின் உடல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கணவர் சிவகுமாரிடம் ராமநாதபுரம் காவல்நிலைய  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்