கோவையில்  உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Default Image

கோவையில்  உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார்.

மாணவி உயிரிழந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

பின்னர் உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கின் அடிப்படையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்