கோயில் இந்தியா என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு!முதலமைச்சர் பழனிசாமி
திருக்கோயில் இந்தியா என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,உலக நன்மைக்காக ஞானிகளும், மகான்களும் தங்களை வருத்திக் கொள்கின்றனர் .மகான்களின் அறிவுரைப்படி அறவழியில் நடந்தால் தனி மனிதனுக்கு துன்பம் ஏற்படாது. தமிழ்நாடு மகான்களைத் தோற்றுவிக்கும் ஞான பூமியாக திகழ்கிறது.மக்களிடையே உயர்ந்த விஷயங்களை பரப்புவதை சமயங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. நல்லெண்ணம்,தீங்கு செய்யாமை,கொல்லாமை ஆகியவற்றை சமயங்கள் பரப்புகின்றன என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.