‘கொடுமையின் உச்சம்!’ – ஆனவக்கொலை பற்றி பேட்ட இயக்குனர் காட்டம்!!

Default Image

நான்கு மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஸ் – சுவாதி என்ற காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆனவக்கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் அப்பா ஸ்ரீனிவாசன், பெரியப்பா கிருஷ்ணன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து பலரும் தங்களது கருத்தை கூறிவரும் நிலையில், தற்போது பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எதிர்ப்பை டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி உள்ளார். இதில், கொடுமையின் உச்சம். அன்று ராஜலக்ஷ்மி, இன்று நந்தீஷ் – சுவாதி! மனிததன்மையற்று செயல்படும் காட்டுமிராண்டிகளுக்கு இன்னும் முடிவு இல்லாமல் உள்ளது. இதற்கான வழியை நாம் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்