திருவாரூரில் செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
அக்பர் அலி என்பவர் மெஜஸ்டிக் மொபைல்ஸ் எனும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரிடம் செல்போன் வாங்குபவர்களிடம் 15% பணத்தை கூடுதலாக பெற்று அதன்பிறகு கேஷ்பேக் எனப்படும் சலுகையை வழங்கி வந்துள்ளார். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்கினால் 1,150 ரூபாய் செலுத்த வேண்டும்.
பின்பு அஜந்தா இ வேர்ல்டு எனும் நிறுவனத்தின் உரிமையாளர் பிரகலாதன் என்பவரை நம்பிய அக்பர் அலி அவர் கூறியதை செய்தார் ,அதாவது 90 நாட்கள் கழிந்ததும் மொபைலின் விலையான ஆயிரம் ரூபாயும் வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கப்படும் என்பதே இந்த சலுகையின் சாராம்சம். இந்த முறையில் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று தனக்கு அளிக்குமாறும், அவ்வாறு தரும் பணத்தை 100 சதவிகிதமாக 90 நாட்களில் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய அக்பர் அலி கடந்த ஆண்டு கேஷ்பேக் சலுகை மூலம் மொபைல் விற்ற பணம் 13.75 லட்சம் ரூபாய் பணத்தை பிரகலாதனிடம் வழங்கியுள்ளார். 6 மாதங்களாகியும் கூறியபடி 100 சதவிகித பணத்தை திரும்ப வழங்காமல் பிரகாலாதன் ஏமாற்றி வந்துள்ளார். அக்பர் அலி புகார் அளித்ததன் பேரில் பிரகலாதனை திருவாரூர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…