கேரளா நிவாரண நிதி:உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர்…!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேரளாவுக்கு நிவாரண நிதியாக தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண நிதியாக தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர்.
DINASUVADU