கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைப்பு…!! கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!

Published by
kavitha

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கப் படுவதாக, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கில், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே நடத்தப்படுவதாகவும் முறையிடப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை வாங்கவோ, அவற்றை பரிசீலிக்கவோ கூடாது எனவும், தற்போதைய நிலையே தொடர வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் அறிவித்துள்ளார். உத்தரவு குறித்த ஆணை இதுவரை கிடைக்கவில்லை என்றபோதும், கேள்விப்பட்டதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,

Published by
kavitha

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

29 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago