கூடுதல் நிதியுடன் வள்ளுவர்கோட்டம் புதுப்பிக்கப்படும்! அமைச்சர் கடம்பூர் ராஜு

Default Image

செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,வர்தா புயலால் பாதிப்புக்குள்ளான வள்ளுவர்கோட்டம் கூடுதல் நிதியுடன் புதுப்பிக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆயிரம் விளக்கு உறுப்பினர் கு.க.செல்வம், எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முதற்கட்டமாக பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுச்சுவரை பலப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் திருக்குறள் எழுதும் பணிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வள்ளுவர்கோட்டத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்