குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்த  நாகஜோதி – தினேஷ் தம்பதிக்கு கடந்த 12ம் தேதி சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பின்னர், குழந்தை மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரியும் அனுராதா, இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசி குழந்தையை விற்பனை செய்ய இடைத்தரகர் லோகாம்பாள் என்பவருக்கு தகவல் கொடுத்து அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பின் நாகஜோதி – தினேஷ் தம்பதியிடம் பிறந்த குழந்தையை விற்று விடுமாறு மருத்துவர் அனுராதாவும் கூறியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதினர் நாமக்கல் கலெக்டர் உமா எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்ததை அடுத்து அரசு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாளை கைது செய்யப்பட்டனர். அதாவது, இரண்டுக்கு மேல் கூடுதல் குழந்தைகள் பிறந்திருந்தது என்றால், ரூ.2 லட்சம் வரை விலை பேசி விற்பனை செய்வதை மருத்துவர் அனுராதா, கரூரைச் சேர்ந்த இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால், அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

7 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

9 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

9 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

10 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

11 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

12 hours ago