குரூப்-2 தேர்வில் தவறான விடை ….. 6 கேள்விகளுக்கு 9 மதிப்பெண்…..டிஎன்பிஎஸ்சி உத்தரவு..!!

Published by
Dinasuvadu desk

குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில் 9 கருணை மதிப்பெண்கள் வழங்க டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வருவாய்த் துறை உதவியாளர், சார் பதிவாளர் உள்ளிட்ட காலியாக உள்ள ஆயிரத்தி 199 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 11ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வை 6 லட்சத்து 26,726 பேர் எழுதினர்.

இந்த தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை கேட்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், குரூப்-2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற கணக்கில் 9 கருணை மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவிருந்த வனவர், வனக்காவலர், ஓட்டுநர் உரிம வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளும் கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DINASUVADU.COM

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

2 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

9 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

10 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

10 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

10 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

10 hours ago