குட்கா ஊழல் …!அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிக்கு ஆப்பு …!மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் …!

Default Image

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிவிலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 18-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்று  திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இது குறித்து நேற்று முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்தார்.அதில் அவர் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்.

இந்நிலையில்  அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிவிலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 18-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்று  திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்