அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கல்வி வழிக்காட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, இதற்கான தொடக்கவிழா மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி இம்மையத்தை தொடங்கி வைத்தார். மாணவர் சேர்க்கை விழா 2 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளான இன்று ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற 17 மாணவ, மாணவிகள், தங்களது மாற்றுச் சான்றிதழ்களோடு வந்து அரசு பள்ளியில் சேர்ந்தனர். மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் தோறும் கல்வி வழிக்காட்டுதல் மையம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார். கிராமங்கள் தோறும் சென்று அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்து 147 மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கான அறிவுரை, பல்வேறு துறைகளின் மூலம் பெறப்படும் கல்வி சார்ந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை கல்வி வழிக்காட்டுதல் மையங்கள் மூலம் வழங்கப்படும் எனவும் மகேஸ்வரி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…