காவிரி விவகாரம்:இன்று பா.ம.க சார்பில் தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்!

Default Image

பா.ம.க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியில் நடைபெறும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க, த.மா.கா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்