காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் போராட்டங்களை கைவிட வேண்டும்…!தமிழிசை

Published by
Venu

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் போராட்டங்களை கைவிட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள ‘ஸ்கீம்’ என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் மே 3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் நிலைப்பாடு சரி என்பதையும், சட்ட ரீதியாகவே மத்திய அரசு செயல்படுகிறது என்பதை ஏற்கும் வகையில் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு கேட்டதுபோல சற்று அவகாசத்தையும் கொடுத்துள்ளனர்.

காவிரி பிரச்சினை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதற்கு காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளே காரணம். இதை மறைப்பதற்காகவே இப்போது மத்திய அரசை குறைகூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா இரு மாநிலங்களிலும் அமைதி காக்க வேண்டும். அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காணும் வகையில் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் நடத்தும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும். அரசியல் சுய லாபங்களுக்காக போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்யாமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற வேண்டும்,இவ்வாறு அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

35 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

60 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago