தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் போராட்டங்களை கைவிட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள ‘ஸ்கீம்’ என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் மே 3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் நிலைப்பாடு சரி என்பதையும், சட்ட ரீதியாகவே மத்திய அரசு செயல்படுகிறது என்பதை ஏற்கும் வகையில் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு கேட்டதுபோல சற்று அவகாசத்தையும் கொடுத்துள்ளனர்.