காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்.3ஆம் தேதி  கடையடைப்பு போராட்டம்…!

Default Image

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 3ஆம் தேதி  கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பு முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள், வணிகர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டது. எந்த தனிப்பட்ட லாபநோக்கத்திற்காகவும் கடையடைப்பு போராட்டம் இல்லை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடையடைப்பில் சென்னை ஓட்டல்கள் சங்கம் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.

அதேபோல், ஏப்ரல் 3ம் தேதி கோயம்பேட்டிலும் கடையடைப்பு நடைபெறும் என காய்கறி, கனி, மலர் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக சார்பில் தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ஏப்ரல் 5-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்