காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்..!

Default Image

ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடைபெற்ற மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது .இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார்  சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த விழாவில்  கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்தை ஏழைகள் இல்லாத தமிழகமாக உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் கூறினார் .  தனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.காவிரி மேலாண்மை பிரச்சினையில் மக்களை ஏமாற்ற தி.மு.க. பல நாடகங்களை நடத்தி வருகிறது அனால் அது பொதுமக்களிடம் செல்லாது.

காவிரி மேலாண்மை பிரச்சினையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் .அவரது வழியில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வெற்றி பெற்றுள்ளார்.
Related image

தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை மீட்டுத்தரும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். இந்த கோட்டையை எவராலும் கிட்ட நெருங்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்