காரைக்குடியில் புதிய நியாயவிலைக்கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், திறப்பு விழாவுக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி திரும்பிச் சென்றார். சூடாமணிபுரத்தில் நியாய விலைக்கடைக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவுக்கு வந்த அவர், நியாயவிலைக் கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார். மேலும், அதிகாரிகளும் யாரும் வராததால், அதிருப்தி அடைந்த அவர், புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழாவை புறக்கணித்து, புறப்பட்டுச் சென்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் மெத்தனப் போக்கால் நிதி வீணடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் செய்த்களுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…