கார்த்தி சிதம்பரத்துக்கு குற்றச்சாட்டு ஆவணங்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு..!

Published by
Dinasuvadu desk

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ள சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் 3 பேருக்கும் வருமானவரித் துறை கடந்த ஏப்ரல் 13-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

அதில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சொத்துகளை வாங்கியது குறித்தும், வங்கி கணக்குகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீசுக்கு கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சார்பில் வருமானவரித் துறைக்கு விளக்கக்கடிதம் அனுப்பப்பட்டது.

கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத்தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வருமானவரித் துறையினர் புகார் மனு தாக்கல் செய்தனர்.

குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிடக்கோரியும், இதுதொடர்பான விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை நாளைக்குள்(14-ந் தேதி) மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago